ஒன்பது வயது சிறுமி படுகொலை: உண்மையை வெளிப்படுத்திய கொத்துரொட்டி தயாரிப்பாளர் !

பண்டாரகம, அட்டுலுகமவில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொட்டு ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கொட்டு ரொட்டி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. அறிவித்தது.

28 வயதான பிரதான சந்தேகநபர் அதேபகுதியில் முஸ்லிம் காலனியில் வசிப்பவராவார் என்றும் அவர் போதைப்பொருள் (ஐஸ்) க்கு அடிமையானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் கோழி இறைச்சி வாங்குவதற்காக இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு பின்னால் மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கையில் இறைச்சியுடன் தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சிறுமியை பிடித்து அருகிலுள்ள புதர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சிறுமி கூக்குரலிட்ட போதும் சிறுமியை அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக சிறுமியின் வாயில் துணி ஒன்று திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் முகத்தை சேற்று நீரில் தள்ளி, அவரது முதுகில் முழங்களால் அழுத்தியுள்ளதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *