மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

தம்புள்ள, மே 31

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம் விலை 400 ரூபாவுக்கும் அதிகமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழக்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது.

குறித்த ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *