
கொழும்பு, மே 31
சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை
ஊழியர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3
தினங்களில் மாத்திரம் அலுவலகத்துக்கு
வந்து காலை 4.15 மணி முதல் மாலை 4.30
மணிவரை கடமையாற்றுவர் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில்
காலை 4.30 மணி முதல் மாலை 4.15
மணிவரை வீடுகளிலிருந்து அவர்கள்
பணியாற்றுவர்.
மறு அறிவித்தல் வரை இந்நடைமுறை
நீடிக்கும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய், வியாழன்
தினங்களில் சிவில் விமானப்போக்குவரத்து
அதிகாரசபை அலுவலகத்துக்கு பொதுமக்கள்
சமுகமளிக்க வேண்டாம் என
கோரப்பட்டுள்ளனர்.