அதிக போதைப் பொருள் பாவனையால் மன்னாரில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

அதிக போதைப் பொருள் பாவனை காரணமாக மன்னாரில் நேற்று இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது வித்திராஸ் – மௌசாட் வயது 35 என்னும் காட்டாஸ்பத்திரி பேசாலை மற்றும் மகேந்திரன் பிரதீப் வயது 26 என்னும் தலைமன்னாரைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திடீர் சுகயீனம் உற்றதாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் அனுமதிக்க முன்பே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஓர் வாகனத்தில் நான்குபேர் கொழும்பு நோக்கிப் பயணிக்க முறபட்ட சமயம் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அதிக போதைப் பொருள் பாவனையே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *