
கொழும்பு, மே 31
அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க சில சட்டங்களில் திருத்தம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
அதன்படி 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்கஉள்நாட்டு வருவாய் சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க டெலிகாம் லெவி சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர் தீர்மானித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட. விதிப்பனவுச் சட்டம், 1988 ஆம் ஆம் ஆண்டு 40 ஆவது இலக்க நிதி மேலாண்மைச் சட்டதின் 2003 இன் 3 ஆம் இலக்கத்தை மாற்ற முன்மொழிந்துள்ளார்.
இதேவேளை 695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.