
கொழும்பு, மே 31
நாளை முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன என
ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சாதாரண ரயில் கட்டணம், பொதி சேவை கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் எவையும் அதிகரிக்கப்படமாட்டாது என ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.