
கொழும்பு, மே 31
மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதமர் பதவியில்
இருந்து நீக்குவது என்பதே தனது அரசியல்
வாழ்க்கையில் எடுக்கப்பட்ட மிகவும்
கடினமான தீர்மானம் என ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்க்ஷ ஆளும் கட்சியினரின்
கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
நாட்டுக்காக தான் அந்தக் கடினமான
தீர்மானத்தை எடுத்ததாகவும், நாட்டின்
எதிர்காலத்துக்கு தேவையான
சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக
இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21 ஆவது
திருத்தம் தனது விருப்பத்துக்கேற்ப
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.