நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடி நிலைமையைச் சந்தித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதற்கான எதிர்வு கூறல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அதேவேளை இலங்கையில் திட்டமிடாமல் நடைபெற்ற பகுதிகளில் மற்றும் வெளிநாட்டு அதிகளவு கடன் காரணமாக இன்று பாரிய பொருளாதார சூழ்நிலையை இறங்கு முகம் கொடுத்து வருகிறது.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டுமானால் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்கள் என தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் சீனாவிடம் நிபந்தனை இல்லாமல் கடன்களை வேண்டியது எனவே தற்போது நாடு பாரிய பொருளாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்தார்.