டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது: கனரக ஆயுதங்களை கோரும் உக்ரைன்!

டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால், கனரக ஆயுதங்களை மேற்கு நாடுகளிடம் உக்ரைன் கோரியுள்ளது.

கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் கூறுகையில்,

“சிறு பகுதிக்குள் சுற்றி வளைத்து, அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது. உக்ரைன் படைகள் தங்கள் நிலையைத் தொடர்கின்றனர். அவர்கள் வசம் உள்ள பகுதிகளைக் காக்கிறார்கள். ரஷ்ய படையினர், அதிக துப்பாக்கி, அதிக கனரக பீரங்கிகளைக் கொண்டு, அப்பகுதிகளை 24ஃ7 என தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

பொதுமக்களின் வீடுகள், மக்களின் கட்டுமானங்கள் மற்றும் உக்ரைன் இராணுவத்தையும் தாக்குகிறார்கள்.

நிலைமை மிக மிக தீவிரமானது. உக்ரைன் படைகள் மேற்கு நாடுகளிடம் இருந்து, தாங்கள் நீண்ட காலமாக கோரி வரும் கனரக ஆயுதங்களை நிச்சமாக எதிர்பார்த்துள்ளனர்” என கூறினார்.

அதேநேரத்தில், டோன்பாஸில் சண்டையிடும் போது, உக்ரைன் படையினர் பொதுமக்களின் கட்டுமானங்கள் மீது அட்டூழியமான தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *