வரி கட்டமைப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது அமைச்சரவை கூட்டமை நேற்று இடம்பெற்றது.

இந்நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஐந்து வரி கட்டமைப்புகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை உள்நாட்டு இறைவரிச் சட்டம், வற்,தொலைத்தொடர்பு வரிச்சட்டம், பந்தயம் மற்றும் விளையாட்டு வரிச்சட்டம், நிதி முகாமைத்துவச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *