
கொழும்பு, மே 31
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி தொகையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பாவனைக்கு போதுமானதாக இருக்குமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே நாட்டின் பாவனைக்காக அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 7 இலட்சம் மெற்றிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்