அம்பாறையில் காணாமல்போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் மீட்பு!

அம்பாறையில் காணாமல்போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் காப்பகத்தில் ஒரு வருடமாக தங்க வைக்கப்பட்டிருந்த இச்சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமி கடந்த நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியிலிருந்து காணாமல்போனதாக பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் நேற்று இரவு குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி திகல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *