
கொழும்பு, மே 31
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் தலைவர், கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை எடுத்துரைத்தார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், இன்று நடைபெற்ற இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்காவும் கலந்து கொண்டார்