தெதுரு ஓயாவில் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தாழ்வான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், திடீரென நீர்மட்டம் உயருவதால் அவதானமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் ஆற்றின் நீர் மட்டம் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *