ஆலயத்தை மீட்டுத் தருமாறு கோரி செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு செங்கலடி இலுப்படிச்சேனை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தில் அன்மைக் காலமாக நிலவிவரும் சர்ச்சை காரணமாக பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர். 

 இலுப்படிச்சேனை   கிராமத்தை சேர்ந்த மக்கள் இன்று காலை ஒன்றிணைந்து செங்கலடி வரை உழவு இயந்திரத்தில் சென்று    செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான இலுப்படிச்சேனை  ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினை தனி நபர் ஒருவர் கடந்த காலங்களில்  ஆலய தலைவராக இருந்த போது   அவர் மற்றும் அவரது குடும்பவழியே குறித்த ஆலயத்தை  தலைமை தாங்க வேண்டும் எனவும் இதனை ஆலய யாப்பு மூலமாகவும் எழுதியுள்ளதாகவும் மற்றும் ஆலய நிர்வாக செயற்பாடுகளுக்கு  குறித்த நபர் எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்து மக்கள் தமது ஆலயத்தை மீட்டுத் தருமாறு கோரி பிரதேச செயலகம் முன் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி நபர் ஆதிக்கத்தின் கீழ் உள்ள எமது ஆலயத்தை மீட்டுத்தரவும் , தனி நபர் ஆதிக்கத்தை நிறுத்து, அரச நிர்வாகமே கவணம் எடு, ஒழிக ஒழிக தனி நபர் ஆதிக்கம் ஒழிக போன்ற பல வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் இன்று காலை ஈடுபட்டனர். 

பிரதேச செயலகம் முன் சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தின் பின் செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் அவர்கள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டறிந்தார்.   

இது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் மக்களுக்கு சரியான வகையில் நீதி நியாயம் கிடைக்கப்பெறும் வகையில் தாம் செயற்படுவதாகவும் பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *