
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாடு முழுவதும் குறித்த தினங்களில் மின்தடைப்படவுள்ளது என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வவுனியாவில் மெனிக்பாம் வலயம் 2, சக்திகம மல்வத்து ஓயா, மெனிக்பாம் வலயம் 3-2, மெனிக்பாம் வலயம் 4, ஆண்டியபுளியங்குளம், சுகாதார மையம், கதிர்காமநகர், கிறிஸ்தவகுளம், மெனிக்பாம் வலயம் 3- 1, மெனிக்பாம், மெனிக்பாம் (அறிவுத்தோட்டம்), முகத்தாங்குளம், 2 ஆவது பண்ணை , பீடியாபார்ம், பீடியாபார்ம் பழைய கிராமம், பெரியகாடு, புதுக்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.