ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான தகவல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமுக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தநாயக்க ஏக்கநாயக்க (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் ஊடகங்கள்) இதனைத் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர், திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமுக அபிவிருத்தி தொடர்பான இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்குத் தேவையான வசதிகளைக் கோரிய நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், விசேட பாதுகாப்பின் கீழ், தேவையான வசதிகளை வழங்கியிருந்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ராமநாயக்கவை பரீட்சையில் பங்குபற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *