வயல்வெளியில் ராட்சத நுரைக் கோளங்கள்! – பதுளையில் சம்பவம்

பதுளை – பசறை பிரதேசத்தின் வயல்வெளியில் ராட்சத நுரைக் கோளங்கள் தோன்றிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அப்பிரதேச மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசறை பிரதேசத்தின் மடுகஸ்தலாவை, கன்னில கிராமத்தின் வயல்வௌியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட வயல் வெளியின் கீழ்ப்பகுதியில் நீர்வடிந்தோடும் தாழ்நிலப் பிரதேசத்தில் இவ்வாறான நுரைக்கோளங்கள் தோன்றியுள்ளன.

பிரதேசத்தின் நீர் ஊற்றுகளில் எண்ணெய் கசிவான நீர் வெளிப்படுவதன் காரணமாக இதற்கு முன்னரும் இப்படியான சிறிய நுரைக் கோளங்கள் அந்த பிரதேசத்தில் தோன்றியுள்ளதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *