
பண்டாரகம,மே 31
பண்டாரகமை, அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (31) பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.