
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவியொருவர் வைத்திய மேற்பார்வையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
குறித்த மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர், பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலையின் பணிப்பாளர் உபுல் கருணாரத்னவினால், சிறுமி பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பரீட்சை நிலையத்திற்குச் சென்ற மாணவி 7 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.