மே 9 சம்பவம்: மேலும் 6 பேர் சிஐடியால் கைது

கொழும்பு,மே 31

மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரும், மொரட்டுவை மாநகர முதல்வரின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *