
கொழும்பு,மே 31
மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரும், மொரட்டுவை மாநகர முதல்வரின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.