ஆயிஷா கொலை வழக்கில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரிய சந்தேகநபர் – நீதிமன்றம் அனுமதி !

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் சந்தேகநபரை நேற்றைய தினம் பிரசன்னப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்றைய தினம் வாக்குமூலத்தை வழங்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

மேலும் வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, காவல்துறையினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் 28ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *