பெருமளவிலான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர் !

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்தோடு வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *