
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மே24ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.
நாடளாவிய ரீதியில் 3,844நிலையங்களில் நடைபெற்று வரும் பரீட்சையானது இன்றுடன் நிறைவுபெறுகின்றது.
இதேவேளை நாட்டின் சில பரீட்சை மத்திய நிலையங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால் பரீட்சார்த்திகள் அருகிலுள்ள மற்றுமொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இன்றைய தினம் படகு சேவை முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.