21 தொடர்பில் 10 கட்சிகளின் முன்மொழிவுகள் பிரதமருக்கு?

கொழும்பு, ஜீன் 01

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த முன்மொழிவுகள் இன்று (01) பிரதமரிடம் கையளிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதன் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது 10 கட்சிகளின் இறுதி உடன்பாடு குறித்து கலந்துரையாடினர்.

சகலரும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், அதற்கேற்ப முன்மொழிவுகளை பிரதமரிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *