அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் உரிய சீர்திருத்தங்களை கண்டறிந்து தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எதிர்வரும் 6ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த யோசனைகள் குறித்து கட்சி செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

தீர்மானங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறுவதே கூட்டத்தின் நோக்கம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.,

மேலும், 2022 தேர்தல் சீர்திருத்த செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து கட்சியின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *