மே 9 கலவரம் – இதுவரை 2 ஆயிரத்து 252 பேர் கைது!

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1010 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 54ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது,

அத்தோடு, அலரிமாளிகைக்கு முன்பாகவும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *