இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பு 02 – கங்காரம பகுதியில் அமைந்துள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலர் வருமானமின்றி வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாாமல் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போதுள்ள விலைவாசி அதிகரிப்பும், சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் தொடக்கம் பணம் படைத்தவர்கள் வரை தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள காரணமா அமைந்து விடுகின்றது.
இந்நிலையிலேயே கொழும்பில் இயங்கி வரும் அரச பொறியியல் கூட்டுத்தாபன நிறுவனத்தில் பணியாற்றிவரும் உத்தியோகத்தர்கள் தமது சம்பளத்தினை அதிகரிக்குமாறு கோரி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



பிற செய்திகள்