மஹிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்ரமணியம் சுவாமி

கொழும்பு, ஜுன் 01

டெல்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்னாள் பிரதமர் மஹிமந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்கு அழைப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக இந்திய முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுவதற்கும் இந்து, பௌத்த ஆலயங்களுக்கு விஜயம் செய்வதற்கும் மஹிந்த ராஜபக்ஷவை அழைப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக டுவிட்டரில் சுப்ரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார். பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜூன் மாதம் அவர் வர முடியும் என தான் நம்புவதாகவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *