தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த திட்டங்களையும் முன்னெடுக்கவிடாமல் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இறந்த உடலங்களை எரிக்கும் மின் தகனசாலை மட்டக்களப்பில் அமைப்பதற்கான பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இந்த மின்தகனசாலையினை அமைக்கும் பணிகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் மற்றும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன், மாநகரசபையின் ஆணையாளர் மதிவண்ணன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக குறித்த மின்தகன சாலையினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலும் அவை காலதாமதமான நிலையில் மீண்டும் இன்று அதன் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
சுமார் மூன்று கோடி ரூபா செலவில் இந்த மின்தகன சாலை அமைக்கப்படுவதன் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவந்த தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மின்தகன நிலையம் இல்லாத காரணத்தினால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் பொலநறுவை போன்ற இடங்களுக்கு எரியூட்ட அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்