முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் இருந்து கடத்தப்படவிருந்த சுமார் பத்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன் 5 பேர் தப்பி ஒடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
சுமார் பத்து இலட்சம் பெறுதியான முதிரை மரக்குற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா பகுதியில் இருந்து மயக்கத்தில் முயற்சிகள் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மரங்களை மீட்டதோடு ஒருவரை கைது செய்தனர்
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.