மொட்டை மீண்டும் மலரச் செய்ய திரைமறைவு முயற்சி
ரணிலுக்கு பதில் புதிய பிரதமரை கொண்டு வர பெரமுன பிரயத்தனம்
**மொட்டை மீண்டும் மலரச் செய்ய திரைமறைவு முயற்சி
புதிய பிரதமர் ஒருவரை கொண்டு வந்து மொட்டு ஆட்சியை மீண்டும் மலர செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பகீரத முயற்சிகளை முடுக்கி விட்டு உள்ளது.
அரசமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதன் மூலம் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குகின்ற வியூகத்தை திட்டமிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக பெரமுன தலைமையகத்தில் கடந்த 26 ஆம் திகதி முக்கியமான மந்திராலோசனை கூட்டம் இடம்பெற்றது. இதில் 21 எம். பிகள் பங்கேற்றனர்.
21 ஆவது திருத்த சட்டம் தற்போதைய தேவையே அல்ல, மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்பட வேண்டும் என்று பெரமுனவின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்தார்.
