
இலங்கையில் இருந்து இந்தியா சென்று பங்களாதேஸ் வழியாக லண்டன் செல்ல முற்பட்டவர் முடியாமல் போகவே மீண்டும் சென்ற வழியில் நாடு திரும்ப முற்பட்டவேளையில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 28 வயது குடும்பஸ்தர் 2020 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து படகு வழியாக தழிழ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து போலிக் கடவுச் சீட்டின் மூலம் பங்களாதேஸ் சென்று பங்களாதேசில் இருந்து லண்டன் போக முயன்றுள்ளார்.
லண்டன் போக முடியாத காரணத்தினால் பங்களாதேசில் இருந்து திருட்டுத் தனமாக எல்லை தாண்டி மீண்டும் இந்தியாவின் திரிபுரா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். தமிழ்நாட்டில் ஓர் படகு முகவரை அனுப்பி இலங்கைக்கு வருவதற்கு முயன்றுள்ளார்.
இலங்கை வருவதற்காக நேற்றைய தினம் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்த சமயம் இராமேஸ்வரம் கியூப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிற செய்திகள்