கிளிநொச்சி வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது -4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.