மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி! கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது -4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *