
நாகொட, ஜுன் 02
நாகொட பொது வைத்தியசாலையின் மேல் மாடியிலிருந்து நோயாளி ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்த அவர்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த நபர் மாடியிலிருந்து குதித்தாரா அல்லது தவறி வீழ்ந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.