IMF இடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற பேச்சுவார்த்தை!

இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சர்வதேச ஊடகமொன்று, இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *