
யாழ்ப்பாண மட்பாண்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மட்பாண்ட தொழிலாளி ஒருவர் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;
இந்த மட்பாண்ட தொழிலினினை பரம்பரையாக செய்து வருகிறோம்,முன்னைய காலப்பகுதிகளில் மண்ணினை இலகுவாக பெறக்கூடியதாக இருந்தது.
தற்போதைய நாட்டின் சூழ்நிலையால் இந்த தொழிலுக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமமாக உள்ளது.
மண்ணினைப் பெறுவதற்கான வாகனக்கூலிகள் அதிகமாக உள்ளது. இதற்கமைய லோட் மண் கொண்டுவருவதற்கு 50 ஆயிரம் வாகனக்கூலி கேட்கிறார்கள்.
ஏற்றுமதிகளுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. சங்கானை , பண்டத்தரிப்பு,மாதகல் போன்ற பிரதேசங்களில் தடைகள் இருந்த போதிலும் ஓடர் செய்பவர்களிடம் கொண்டே கொடுக்கின்றோம்.
சமுர்த்தியால் 1 1/2 இலட்சம் மட்பாண்ட தொழிலுக்கான கொட்டில் போடுவதற்காக நிதி வழங்கப்பட்ட போதிலும் வேறு எந்தவிதமான ஊக்குவிப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளவில்லை.
இரு மாதங்களுக்கு முன்பு அங்கஜன் இராமநாதன் இந்த பிரச்சனைகளை தீர்த்த்து தருவதாக கூறி கடிதம் தந்த போதிலும் இந்த விடயத்தில் இருந்து விலகி விட்டார்.
இவ்வாறு சில ஊக்குவிப்புக்கள் செய்வதாக கூறுகிறார்கள் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை .இதனால் எங்கள் தொழில் வீழ்ந்துகொண்டே செல்கிறது.
இந்த மட்பாண்ட தொழிலுக்கான மண்ணினை யாரை பிடித்து எங்கு எடுப்பது என்று தெரியவில்லை.
கண்டாவளையில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் வேறு நபர்கள் பிடுத்து வைத்திருக்கிறார்கள்.அவ்விடங்களில் மண்ணினை பெறுவதற்கு தடுக்கிறார்கள் என தெரிவித்தனர்.