
கொழும்பு, ஜுன் 02
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக இன்று (02) வரை 5,357 குடும்பங்களைச் சேர்ந்த 22,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை தொடர்ந்தும் காணப்படுவதால் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என்பதோடு திடீர் வெள்ளம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. எனவே ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கேட்டுக் கொண்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார்.