ரம்புக்கனை சம்பவம்: சமர்ப்பணங்களை முன்வைக்க உத்தரவு

கொழும்பு, ஜுன் 02

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளை கைது செய்யுமாறு, கேகாலை நீதவான் உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் ஜூன் 27ஆம் திகதி தமது சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *