ரணிலை தாங்கிப் பிடிக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை அம்பலமாக்குவோம்-யோதிலிங்கம் எச்சரிக்கை!

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்.ஊடக மையத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் ஜோதிலிங்கம் உரையாற்றுகையில்,

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை சுயாதீன ஆணைக்குழுக்கள் ,அரசியலமைப்பு பேரவை என்பவற்றினால் பகிர்ந்து வழங்குதல் 24 ஆவது திருத்தத்தின் நோக்கமாகும்.இத்திருத்தம் தொடர்பான வாதிப்பிரதி வாதங்கள் தென்னிலங்கையில் சூடு பிடித்துள்ளன.

பொதுஜன பெரமுனவினரும்,மகா நாயக்கர்களும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகளவு குறைக்கப்படுவதை ஏற்கவில்லை .

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என அனைத்தும் ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

இதனை ஒரு வகையில் பெரும் தேசிய வாதத்தின் லிபரல் முகத்திற்கும், பெரும் தேசிய இன வாத முகத்திற்கும் இடையிலான ஒரு போராட்டம் எனலாம்.

தென்னிலங்கை போராட்ட அரசியல் எவ்வாறாகவும் இருந்திட்டு போகட்டும் 21 ஆவது திருத்தம் அடிப்படையில் சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான திருத்தம். இலங்கைத் தீவினை ஜனநாயகப்படுத்துவதற்கான திருத்தம் அல்ல.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ்,முஸ்லீம் ,மலையக மக்களின் நலன்கள் அங்கு எந்த வகையிலும் உத்திரவாதப்படுத்தப்படவில்லை.

போதிய பிரதிநிதித்துவமும் தங்கள் சார்ந்த இனங்களின் நலன்கள் கருதி தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தால் மாத்திரமே குறைந்த படசமாவது தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களை இத்திருத்தம் திருப்தி படுத்தும் என நம்புகிறோம்.

19 ஆவது திருத்தத்தில் தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவம் திட்டவடடமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

21 ஆவது திருத்தத்தில் அவை எதுவம் இல்லை,வெறுமனவே பிரதிநித்துவம் இருந்தாலும் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.ஜனாதிபதி தயவு பண்ணினால் மாத்திரமே பிரதிநித்துவம் கிடைக்கலாம்.

அமைச்சரைவியின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் மக்கள் அமைச்சரவையில் இனப்பிரச்சனை தீரும் வரை இணைந்துகொள்ளப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதால் அது பற்றி பெரிதாக அக்கறைப் படவில்லை, ஆனால் மலையக ,முஸ்லீம் மக்களும் அக்கறைப்படவேண்டும். தாம் சார்ந்த இனங்களின் விவகாரங்களில் தீர்மானிக்கும் அதிகாரமும் போதிய பிரதிநிதித்துவமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் .

எனவே தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்பு என்ற வகையில் சமூக மைய ஆய்வு மையத்தினராகிய நாம் தமிழ் தேசிய கடசிகளிடம் 21 ஆவது திருத்தம் தொடர்பான 2 கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

  1. 21 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு பேரவையிலும் ,சுயாதீன ஆணைக்குழுக்களிலும் போதிய பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் .
  2. குறைந்தபடசம் தமிழ் மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களிலாவது தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ் பிரதிநிதிகளிடம் இருத்தல் வேண்டும்.

இந்த 2 கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கா விடடால் 21 ஆவது திருத்தத்தை தமிழ் தேசிய கட்சிகள் ஆதரிக்க கூடாது.

இதனை அரசாங்கத்துக்கு திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ் கட்சிகள் இந்த பணியினை மேற்கொள்ளாது ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தால் தமிழ் கட்சிகளை பகிரங்கமாக அம்பலமாக்குவோம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றோம்.

இந்த கோரிக்கைகளை தமிழ் தேசிய கட்சிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *