
கொழும்பு,ஜுன் 02
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களுள் ஒருவராக மஹிந்த கஹந்தகம பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று இவ்வாறு சரணடைந்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.