
கொழும்பு,ஜுன் 02
வெள்ளிக்கிழமை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெள்ளிக்கிழமை 16 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாளைய தினத்திற்குப் பின்னர் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதி அளவிலேயே எரிவாயு சிலிண்டர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆயிரத்து 500 மெட்ரின் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.