ரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்தியது இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .

குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர்.

விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது .

இந்த பிணக்கை தீர்ப்பது தொடர்பாக சட்டமா அதிபருடன் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை கலந்துரையாடுகிறது .

 இது தொடர்பாக கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம், மேற்குறித்த சம்பவம் தொடர்பாக  ஊடக அறிக்கை ஒன்று வெளியாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *