
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .
குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர்.
விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது .
இந்த பிணக்கை தீர்ப்பது தொடர்பாக சட்டமா அதிபருடன் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை கலந்துரையாடுகிறது .
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம், மேற்குறித்த சம்பவம் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்று வெளியாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .