ஜனாதிபதியை சந்தித்த புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி

கொழும்பு,ஜுன் 02

புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) சந்தித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேநேரம், புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவும் ஜனாதிபதியை சந்தித்தார்.

உரிய பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முப்படைகளின் தலைவர், ஜனாதிபதியை சந்திப்பது சம்பிரதாயப்பூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *