இலங்கைக்கு தேவையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை மசகு எண்ணெயை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், எரிபொருள் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது இடம்பெறுவதைப் போன்று எரிபொருள் விநியோகம் வழமைப் போன்று இடம்பெறும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பல பகுதிகளில் ஏராளமான எரிபொருள் வரிசைகள் தொடர்ந்து காணப்படுவதோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *