யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலர் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருவதாக ,சைக்கிள் பழுதுபார்க்கும் வேலை செய்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் சமூகம் மீடியாவுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
25 வருடமாக சைக்கிள் தொழில் செய்கின்றேன் ,என்னுடைய தொழிலே சைக்கிள் தொழில்தான்.
.
பெற்றோல் தட்டுப்பாடில்லாத காலத்தில் இந்த தொழில் பெரிதாக இல்லை.
இப்போது பெற்றோல் தட்டுபாடு காணப்படுவதனால் சிலர் பழைய உதிரிப் பாகங்களையும் ,பழைய சைக்கிள்களையும் கொண்டு வந்து சரி செய்து கொண்டு போகின்றனர் .
முன்னைய காலத்தில் பழைய சைக்கிள் பழுத்தென்றால் உடனே புதிது வாங்குவார்கள்.
இப்பொழுது அப்படியில்லை நிலைமை .பழுதானால் கொண்டு வருகின்றனர்.சிரமப்பட்டேனும் திருத்திக் கொடுக்கின்றேன் .
இளஞ்சமூகம் பெற்றோல் தட்டுபாட்டால் இப்பொழுது சைக்கிளை விரும்புகின்றனர்.
புது சைக்கிள் வாங்குவது மிக சிரமமாக உள்ளது. முன்னர் 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த சைக்கிள் தற்போது , 50 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
பிற செய்திகள்