லாஃப் எரிவாயு கப்பல் நாளை இலங்கை வந்தடையவுள்ளது

கொழும்பு, ஜூன் 03

லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தினால்
இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல்
நாளை (4) இலங்கை வரவுள்ளதாக லாஃப்ஸ்
நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன்
எரிவாயு உள்ளது என்றும் அந்த அதிகாரி
கூறினார்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக லாஃப்
எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *