
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக பொறுப்பேற்ற 70வது ஆண்டு பிளாட்டினம் விழா கொண்டாட்டத்தில் இணைந்துள்ள மாண்புக்குரிய எலிசபெத் மகாரணி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.
ஐக்கிய இராச்சியத்துக்கு மாத்திரமன்றி பொதுநலவாய நாடுகளின் ஒன்றியத்தலைவியாக 70 ஆண்டுகள் பொதுப்பணிச் சேவையாற்றி மாட்சி பொருந்திய அரசுத் தலைவராகவும் முன்மாதிரியாகவும் அவர் விளங்கியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் நீண்டகாலம் அரியணையில் வீற்றிருக்கும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ள மகாராணி அவர்களுக்கு, நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
இலங்கைக்கு சரியான தலைமைத்துவம் கிடைக்கவில்லை;சொல்ஹெய்ம் கவலை!
கவலைக்கிடமான நிலையில் இலங்கை;விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அமெரிக்க துாதர்-வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சந்திப்பு!
முல்லையில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்