
கொழும்பு, ஜூன் 03
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் ஜீன் மாதம் 8ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையிலே கொழும்பு கோட்டை நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.