பாராளுமன்ற உறுப்பினரின் மகன், மருமகள் கைது

தங்காலை,ஜுன் 03

தங்காலை, பெதிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் வைத்து பொலிஸாரை அச்சுறுத்தியதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாத்தறை, மடிஹா பகுதியில் உள்ள வில்லா ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யத் தேடப்படும் திலீப் வெதயாராச்சியின் மகனும் மருமகளும் இரவு ஹோட்டலுக்கு வந்து, அங்கு தமது வண்டியை நிறுத்திவிட்டு ஹோட்டலின் உரிமையாளருக்குச் சொந்தமான வாகனத்தில் மாலபே நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கும் சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய சந்தேகத்தின் பேரில் வில்லா ஹோட்டலின் உரிமையாளரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *